"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


முஸ்லீம்கள் பாபரி மஸ்ஜிதை விட்டுக்கொடுக்க வேண்டுமாம்.

25.10.09


சுவாமி ஸ்வரூப் சரஸ்வதி மஹராஜ், முஸ்லீம் சமூகத்திடம் பாபர் மஸ்ஜித் இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உதவுவது மூலம் இந்துக்களின் மத நம்பிக்கையை மதிக்கும்படி கூறியுள்ளார்.இஸ்லாமியர்களுக்கு எப்படி மக்கா புனிதமானதோ, கிறித்தவர்களுக்கு எப்படி வாடிகன் புனிதமானதோ அதே போல் இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமன் பிறந்த இடம், இந்துக்களுக்கு புனிதமானதாகும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
கோவில்களும் மசூதிகளும் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம், ஆனால் ராமன் பிறந்த இடத்தை மாற்ற முடியாது என்று கூறிய அவர், இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
மேலும், இந்த பிரச்சனை சமுதாய அமைதிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த பிரச்சனை சாதுக்களிடமிருந்து பா.ஜா.க பிடிங்கிவிட்டு பின்னர் அதனை மறந்துவிட்டது என்று கூறினார்.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
-------------------------------------------------------------------------------------------------யார் இடத்தில் யார் கோவில் கட்டுவது என்று தெரியவில்லை. இதில் இந்த புதிர் சாமியார் பாபர் மசூதி இருந்த இடத்தை முஸ்லீம்கள் இந்துக்களுக்கு விட்டுக்கொடுக்கும்படி வேறு கேட்பது கேலி கூத்தாக இருக்கின்றது. எந்த ஒரு இந்துவும் இருக்கின்ற பள்ளிவாசலை இடித்துவிட்டு தங்களுக்கு கோவில் கேட்கவில்லை.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP