"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஹிந்து தீவிரவாதிகள் 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

18.5.10

கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹிந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் உறுப்பினர்கள் நான்கு பேர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.


11 பேரில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.


சந்தேகப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மல்கொண்டா பாட்டீல், யோகேஷ் நாயக் ஆகிய இருவரும் குண்டுவெடிப்பில் காயமடைந்து பின்னர் உயிரிழந்து விட்டனர்.


11 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் மற்றும் நாட்டின் மீது போர் தொடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்கொண்டா பாட்டீல் சனதான் சன்ஸ்தாவின் தீவிர உறுப்பினர்களில் ஒருவன், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலையச் சேர்ந்தவன். நாயக் கோவாவைச் சேர்ந்தவன்.


சனாதன் சன்ஸ்தா அமைப்பு ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP