"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பங்கைக் குறித்து புலன் விசாரணை நடத்தவேண்டும்: சி.பி.எம்

8.5.10

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளைக் குறித்து மத்திய அரசு ஒருங்கிணைந்த புலன் விசாரணை நடத்தவேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கோரியுள்ளது.


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு உறுதியாகியுள்ளது. கைதுச்செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவன் ஆர்.எஸ்.எஸ் காரனாவான்.


மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இவர்களுக்கு பங்குள்ளது.


மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்து பல மாதங்களாக சிறையிலடைத்து சித்திரவதைக்காளாக்கப்பட்டனர். தற்பொழுதும் 26 பேர் சிறையிலுள்ளனர். இவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஆந்திர அரசும், சி.பி.ஐயும் தயாராக வேண்டும்.


முஸ்லிம்களுக்கெதிரான ஒருதலைப்பட்சமான போலீஸ் நடவடிக்கை கவலையை ஏற்படுத்துவதாக மத்திய கமிட்டி வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது.
செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP