"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஷார்ஜாவில் 15 மாடி கட்டிடத்தில் தீ பிடித்தது

7.7.10

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் ரோலா என்ற இடத்தின் அருகே புதினா பகுதி உள்ளது. இங்குள்ள 15 அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று காலை? 6 ? மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவியது. காலை நேரம் என்பதால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் புகை மூட்டத்தால் கண் விழித்தனர். தீப்பிடித்ததை அறிந்ததும் பதட்டம் மற்றும் பரபரப்புடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.


இதற்கிடையே தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தும் தீ வேகமாக பரவியது. இதில் 12 மாடிகள் எரிந்து நாசமானது.


அங்கிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகின. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் 80 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அவர்கள், அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.


தீ விபத்தில் பலர் மாடிகளில் சிக்கி கொண்டனர். அவர்களை தீயணைப்பு படையினர் ஏணிகள் மூலம் காப்பாற்றினர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP