"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


மேட்டுப்பாளையத்தில் சுதந்திரதின அணிவகுப்பு அலுவலகம் திறப்பு விழா

12.7.10

எதிர் வரும் ஆகஸ்ட்-15, 2010 மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தவுள்ளது. இதற்க்கான அலுவலக திறப்புவிழா ஜூன்-09, 2010 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் சகோ.முஹம்மது மீரான் தலைமையில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A.S. இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைக்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் எ.அஹமது பக்ருதீன் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி TH.முஹம்மது குட்டி அவர்கள் மேட்டுப்பாளையம் பைத்துல்மால்சபை தலைவர் ஹாஜிMH ஹனீபா அவர்கள் ஜாமியா மஹ்தியா மகளிர் அரபிகல்லூரி செயலாளர் VME முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மேட்டுப்பாளையம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சகோ. S.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் JUML நகரத்தலைவர் Q.அகபர்அலிஅவர்கள் JAQH மேட்டுப்பாளையம் கிளை சகோ.A காஜா மைதீன் அவர்கள் MMK நகரச் செயலாளர் R முஹம்மது அப்பாஸ் அவர்கள் SDPI வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் MSமுஹம்மது ரஃபி [எ] W பாபு அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் ஜமத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP