NWF ரமலான் சிறப்பு நிகழ்ச்சி
25.8.10
கடையநல்லூர் ஐக்கிய ஜமாஅத் பரசுராமபுரம் வடக்கு தெரு வட்டார கமிட்டி சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி 23 ஆகஸ்ட் அன்று நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளராக நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் கடையநல்லூர் பொறுப்பாளர் சகோதரி பிஸ்மி ஹாஜா அழைக்கப்பட்டிருந்தார் .
அவர் தனது உரையில் ரமலான் மாதத்தின் சிறப்பு பற்றியும் அதன் நோக்கமாக உள்ளச்சத்தை பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். ஒரு பெண் என்ற அடிப்படையில் தங்களுக்கு என்னென்ன கடமைகளும் பொறுப்புகளும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கைகளை சாடியதுடன் ஈருலக வாழ்க்கையின் வெற்றிக்கு மறுமையில் கேள்வி கேட்கப்படுவோம் என்ற அச்சம் ஒன்றே போதும் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துச்சொன்னார் .
பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . இறுதியாக பெண்களின் சமூக பாதுகாப்பிற்காக ஒரு சில தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவற்றப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பரசுராம புறம் வட்டார நிர்வாகிகள் தங்கள் எதிர்பார்த்தது போல் பயான் அமைந்தது என்று மகிழ்வுடம் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தன்னலமற்ற சேவைகளை பாராட்டினர்.
0 comments:
Post a Comment