"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு

14.8.10


ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாலை 3.00 மணியளவில் மேட்டுப்பாளையம் சிறுமுகைரோடு, தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள “மர்ஹும்” மீரான் திடலில் சுமார் 1000 வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு ’பரேட் லீடர்’ பஹ்ருதீன் தலைமையில் நடைபெறும். அணிவகுப்பின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் மு.முஹம்ம்து அலி ஜின்னா அவர்களின் தலைமையில் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும்.


பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியும் நடைபெறும். சுதந்திர தின விழாவை பகிர்ந்து கொள்ள மேற்கு மண்டல மக்கள் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறோம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP