ஒரு சகாப்தத்தின் ஆரம்பம் !
25.10.11
ஜனாப் அஸ்லம் அவர்கள் வென்ற விதம் , சற்றே சிந்திக்க வைக்கின்றது ! அவர் செய்த நற்தொன்றுகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அல்லாஹ்வின் உதவிகொண்டு கடந்த காலங்களில் அவர் செய்த நற்காரியங்களை பட்டியிலிட்டால் அவரரே விரும்ப மாட்டார் என்ற காரணத்தினால், அதை விவரிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு இளைஞனும் இது போன்ற சேவைகளில் ஈடுபட்டால் ஈருலகிலும் நன்மை நம்மை வந்து சேரும். எவ்வித பிரதி பலனையும் எதிரபாராமல் செய்யும் தொன்றே , நம்மை அறியாமல் நமக்கு பலனை தரும்.
இன்று அவர பேசியதிலிருந்து , ஹாஜி ஜனாப் M.M,S அப்துல் வஹாப் அவர்களை நினவு கூர்ந்து பேசிய விதம் தனது நன்றி உணர்வை காட்டுகிறது.
சுகாதாரம் குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசிய விதமும், அவர் பிறந்தது அதிரை என்றாலும் வளர்ந்தது சீமை என்பதால் வளர்ந்த, வாழ்ந்த இடத்தில் கிடைத்த அனுபவத்தை தனது பிரதான கொள்கையாக மேற்கொண்டுருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடியதே !
சுருங்கச் சொன்னால், அவர் அதிரையின் ஒபாமா, என்று சொன்னால் அது மிகையாகது. 45 வருட ஆட்சியயை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல..
அப்துல் ரஜாக்
0 comments:
Post a Comment