"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆதரவு!

11.12.11

மனித உயிருக்கு உலை வைக்கும் கூடாங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்த தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது. அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு கூடாங்குளம் அணு உலையை உடனே மூட வேண்டும் எனவும் வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில குழுவிலும் தேசிய குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.









இதன் தொடர்ச்சியாக அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப. உதயகுமார் அவர்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் Z. முஹம்மது தம்பி நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு அணு உலைக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் எடுத்து செல்லும் எனவும் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP