"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


எ.ஜே. பள்ளி சுவர் இடிப்பு நடந்து எப்படி?

17.3.10

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் அதிரை பள்ளிவாஸலை ஒட்டியுள்ள ஹிந்து முன்னணி தலைவர் பாலாவின் நிலத்தில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனை வெளியேற்ற நீரிரைக்குக்ம் மோட்டாரை
கொண்டு வர்வதற்கு வழியில்லை என்றும் அதற்காக வேண்டி அந்நிலத்தை ஒட்டியுள்ள பள்ளிவாசலின் சுவற்றை தற்போது இடித்துவிட்டு பிறகு கட்டி தருவதாகவும் பாலா கடிதமொன்றை ஊர்ப்பெரியவ்ர் எம்.எம் எஸ். அப்துல் வஹாப் அவர்களீடம் கொடுத்துள்ளான். அவர் அதனை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார். பள்ளிவாசல் நிர்வாகமும் சுவரை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டித்தர வேண்டும் என்ற நிபந்தனையோடு சுவற்றை இடித்துக் கொள்ள அனுமதி வழங்கியது.



நீர்வெளியேற்றி குறிப்பிட்ட காலக் கெடுவையும் தாண்டிவிட்டதால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பாலாவிடம் கேட்டுள்ளனர். அப்போதுதான் தன் திட்டத்தை வெலிப்படுத்தியிருக்கிரான் அக்கொடியவன் "தனது நிலத்தை மற்றொருவரிடம் விற்கப்போவதாகவும், அதற்கு பள்ளி வாசல் இடத்தை நிரந்தர பாதையாக வைத்துக்கொள்ள போவதாகவும்" ஒரு குண்டை போட்டுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காவல்துறைஇடம் முறையிட்டனர்.

காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டனர். மேலும் அப்போதிருந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி.அழகேசன் " நீங்கள் சுவர் கட்டுவதற்கு நான் பாதுகாப்பு அளீக்க முடியாது, முடிந்தால் சுவரை கட்டிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் வெட்டிகொண்டு சாகுங்கள்" என்று கூறி தனது காவி விசுவாசத்தைக் காட்டினார். (கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிரையில் நடந்த வினாயகர் சதுர்த்தியின் போது கலந்துக்கொண்டு பி.ஜே.பி தீவிரவாதி கருப்பு (எ) முருகானந்தத்தால் வண்டிப்பேட்டை பள்ளியருகில் ஊர்வலம் வரும்போது அதில் வைத்து பொன்னாடை போர்த்தப்பட்டவர் டி.எஸ்.பி. அழகேசன் என்பது குறிப்பிடத்தக்கது )


பிறகு சுவர் கட்டுவது சம்பந்தமாக விசாரித்த பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ அவர்கள் முஸ்லிம்கள் பள்ளிவசலுக்கு சொந்தமான இடத்தில் சுவர் எடுத்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சுவர் கட்ட பாதுகாப்புக் கோரி காவல்துறையிடம் முறையிட்டனர். அதிரை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தனது காவி பாசத்தினால் சரியாக ஒத்துழைக்காமல் சுவர் எடுப்பதை தடுத்துள்ளார். ஜமாத்தார் மற்றும் சமுதாய இயக்கங்களின் உறுதியான நிலைப்பாட்டையடுத்து சுவர் கட்டப்பட்டது.


இந்நிலையில், கடந்த 10/03/10 இரவு 10.30 மணியளவில் ஹிந்துத்துவ தீவிரவாதி பாலாவால் அச்சுவர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. இதன் மூலம் அதிரை இந்து, முஸ்லீம் மக்களிடையே மோதலையேற்படுத்தி தனது இயக்கத்தை வளர்க்கலாம் என்ற பாலாவின் எணத்தை குழித்தோண்டி புதைக்கும் விதமாக முஸ்லீம்கள் அமைதி காத்தனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP