ஐ.பி.எல் எதிர்க்கப் பட வேண்டிய ஒன்று
25.3.10
இந்தியாவைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது ஒரு அரசியல் விளையாட்டாகத்தான் இருந்து வருகிறது. இன்று அதை மேலும் ஒரு வியாபாரமாக்கி மக்களை மயக்கும் வித்தைதான் இந்த ஐ.பி.எல். இங்கு சூதாட்டம் மட்டுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த மாய வித்தையில் மக்களின் கண்கள் மறைக்கப் பட்டு ஏமாற்றப் ப்டுகிறார்கள். அதோடில்லாமல் அங்கு திரைப்படங்களின் குத்துப் பாடல்கள் போல் பெண்களின் கவர்ச்சி நடனம்.
ஐ.பி.எல்லில் விளையாடும் வீரர்கள் காசுக்காக ஏலம் விடப்படுகின்றனர். அவர்களின் ஏலத் தொகை பல கோடிகளைத் தாண்டி மக்களை வியக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் புதிதாக சேர்க்கப் பட்ட இரண்டு அணிகள் கூட ஆயிரத்து ஐநூறு கோடிகளுக்கு மேல் ஏலம் விடப் பட்டிருக்கிறது.
இவ்வளவு விலைக் கொடுத்து இதை வாங்குபவர்களின் வியாபாரத்தில் லாபம் எப்படி வரக்கூடும் எனக் கேட்டால் கிடைக்கும் காரணங்கள்
விளம்பரங்கள்
ஸ்பான்சர்கள்
இவற்றிலிருந்து லாபம் கிடைத்து விடுகிறது என மக்களை நம்ப வைக்க முடியாது. நிச்சயம் அங்கு சூதாட்டம் பெரும்பங்காற்றக் கூடும். இல்லையென்றால் அதை இவ்வளவு சிறப்பான வியாபரமாக செய்வதென்பது அசாத்தியமான ஒன்று. இது மக்கள் அனைவரும் அறிந்ததே.
டிக்கெட் விற்பனை
விளம்பரங்கள்
ஸ்பான்சர்கள்
இவற்றிலிருந்து லாபம் கிடைத்து விடுகிறது என மக்களை நம்ப வைக்க முடியாது. நிச்சயம் அங்கு சூதாட்டம் பெரும்பங்காற்றக் கூடும். இல்லையென்றால் அதை இவ்வளவு சிறப்பான வியாபரமாக செய்வதென்பது அசாத்தியமான ஒன்று. இது மக்கள் அனைவரும் அறிந்ததே.
ஐ.பி.எல் அணிகள் பந்தயக் குதிரைகள் போன்றவை. அதிகம் பணம் கட்டப் பட்ட குதிரையை தோற்க வைப்பதுதான் போட்டி நடத்துபவர்களின் குறியாக இருக்கும். இந்த சூதாட்டத்தில் பலர் ஜெயித்திருக்கலாம். காரணம் அவர்களால் பந்தயம் கட்டப் பட்ட குதிரை விலை மதிப்பில் குறைவாக இருந்திருக்கும்.
மொத்தமாகப் பார்க்கும் போது முப்பது பேருக்கு லாபம் என்றால் என்பது பேருக்கு நஷ்டம் இருக்கும். இவை முன்னரே முடிவு செய்யப் பட்டு விடும். இந்த முப்பது பேரின் லாபத்தை வைத்து பந்தயம் நேர்மையாக நடந்தேறியதாக தம்பட்டமடித்து மக்களின் கண்கள் மறைக்கப் படும்.
மக்களும் அந்தப் போட்டிகளுக்கு ஆதரவாக இந்தியன் என்பதை மறந்து நான் சென்னை, கல்கத்தா, மும்பை ஆதரவாளன் என்ற பிரிவினைக்குள் சிக்கி மாற்றி மாற்றி ஆதரவு என்ற பெயரில் பணத்தை வாறி இறைக்கிறார்கள். இதில் ஆரோக்கியமான போட்டி என்பது எந்த அணிகளூக்கிடையேயும் நிச்சயம் கிடையாது.
இதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு ரசிக்க வேண்டும் என சொல்வது மக்களை மடையர்களாக்கும் வேலை. எனக்குப் பிடித்த பல வீரர்கள் கூட இங்கே காசுக்கு விலைபோனவர்கள். இத்தனையும் தெரிந்தும் சில நண்பர்கள் தமிழன் விளையாடும் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன் என்றனர். தமிழனாக இருந்தாலும் ஐ.பி.எல்-ல் என்ன காசில்லாமலா விளையாடுகிறான்.
ஐ.பி.எல் காசுக்காக மட்டுமே! அது ஒரு வியாபாராம்! வீரர்களை போல் மக்களும் அதில் விலைபோவது நிச்சயம் தவறு!
0 comments:
Post a Comment