"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்:65 இடங்களில் எஸ்.டி.பி.ஐ வெற்றி

18.5.10

கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா 65 இடங்களில் இதுவரை வெற்றிப்பெற்றுள்ளது. முழுமையான விபரம் நாளைத் தெரியவரும்.


10 மாவட்டங்களில் 368 வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். தெற்கு கர்நாடகா-39, குர்க்-8, உடுப்பி-11, தும்கூர்-3, ஹம்ஸூர், ஹாஸன், ராம்நகர், கோலார் ஆகிய இடங்களில் ஒரு வார்டிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுள்ளது.


நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.


கடந்த மே மாதம் 8.12 தேதிகளில் 80,159 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 2.32 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP