"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஹிந்துத்வ தீவிரவாதத்தை மென்மையான முறையில் கையாளுகிறது மீடியா - சி.பி.ஐ(எம்)

6.5.10

முஸ்லிம்களை தீவிராதிகளாக மிக கடுமையான முறையில் சித்தரித்து காட்டும் மீடியா, ஹிந்துத்துவ தீவிரவாத விவகாரத்தில் மட்டும் மிகவும் மென்மையான போக்கை கையாளுகிறது' என்று கேரள மாநில சி.பி.ஐ(எம்) செயலாளர் பினாரி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

Justify Full
'மதத் தீவிரவாதமும், மீடியாவின் பங்கும்' என்ற தலைப்பில் திரிச்சூரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


எங்கே உண்மைகளும் பித்தலாட்டங்களும் வெளிவந்து விடுமோ! என்று பயந்து தான், ஹெட்லியை இந்திய அதிகாரிகளிடமிருந்து அமெரிக்கா மறைத்து வருகிறதாக அவர் சூசகமாக தெரிவித்தார்.


'அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் எங்கிருந்தோ நல்ல பண உதவி அளிக்கப்படுகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நரேந்திர மோடியின் ரத்தக்கறை படிந்த கைகளை, வளர்சிக்கான கைகள்!? என்று சிலர் வர்ணிப்பதற்கு அவர் தன் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP