"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஏடிஎம் எந்திரத்தை கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்டு பாரன் காலமானார்

21.5.10

தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்) கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்டு பாரன் (84) காலமானார்.


ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பாரன் இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்வு காரணமாக, ஷெப்பர்டு கடந்த சனிக்கிழமை ஸ்காட்லாந்தின் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள், நேற்று நடைபெற்றன.


எடின்பர்க் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் படித்த அவர், ஒருமுறை அவசரத் தேவைக்காக வங்கியில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது வங்கி பூட்டியிருந்ததால் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. தன்னைப் போலவே பலரும் அவரசத் தேவைக்கு உடனே பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுவதை அவர் உணர்ந்தார். இப்பிரச்னைக்கு தீர்வுகாண, தானாகவே பணம் வழங்கும் எந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.


அவரது எண்ணத்தின் செயல் வடிவமே இப்போது தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் எ.டி.எம்.கள். அவர் கண்டுபிடித்த முதல் எடிஎம், லண்டனில் 1967-ல் பார்கிளேஸ் வங்கி மூலம் பயன்பாட்டுக்கு வந்தது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP