"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்

28.7.10

கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.


அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.


இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.


மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.


மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP