"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


யுவான் ரிட்லி: மனித உரிமைப் போராளிக்கு விசாவை மறுத்த இந்திய அரசு

25.1.10

கர்ப்பப்பை சுதந்திரம் கேட்கும் தஸ்லிமா என்ற கேடுகெட்ட பெண்ணிற்கு விசா வழங்கி உயர்தர பாதுகாப்பை வழங்கிவரும் இந்திய அரசு மனித உரிமைப் போராளியும் பிரபல் பத்திரிகையாளருமான லண்டனைச் சார்ந்த யுவான் ரிட்லிக்கு விசா மறுத்துள்ளது தெளிவான பாசிச சிந்தனைக் கொண்டதாகும்.

நேற்று கேரள மாநிலத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாடு நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக யுவான் ரிட்லி கலந்துக் கொள்ளவிருந்தார். ஆனால் அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்துள்ளது.
உலகின் நாசகார சக்திகளான அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நட்புறவாகக் கொண்டுள்ள இந்தியா தற்ப்பொழுது ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு அடிமையாகி வருவதையே இத்தகைய போக்கு காட்டுகிறது. இதனால் ரிட்லி வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் உரைநிகழ்த்தினார்.

அதில் அவர் இந்திய அரசு தனக்கு விசா மறுத்ததை குறிப்பிடும் பொழுது காந்திஜியின் நாட்டில் எனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதை புரிந்துக் கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டார்.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP