"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஒரே பெயருள்ள 2 மாணவிகள் மாநில ரேங்க் பெற்று சாதனை

15.5.10

General India news in detail

தூத்துக்குடி : திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் செய்யது முகம்மது புகாரி மகள் ஜெம்ஜெம் ஆயிஷா; சாகுல் அமீது மகள் ஜெம்ஜெம் ஆயிஷா. இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான இருவரும் பிளஸ் 2 தேர்வில், குழந்தை வளர்ப்பு மற்றும் சத்துணவு, மனை இயல் பாடத்தில் 400க்கு தலா 385 மதிப்பெண் பெற்றனர்.


இருவரில் முதல் மாணவி எஸ்.ஜெம்ஜெம் ஆயிஷா மொத்த மதிப்பெண் 1200க்கு 956 பெற்று, இப்பாடப்பிரிவில் மாநில இரண்டாமிடம் பிடித்தார்.


நர்சிங் மேல்படிப்பிற்கு யாராவது பண உதவி செய்யவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாவது மாணவி எஸ்.எச்.ஜெம்ஜெம் ஆயிஷா 1200க்கு 917 மதிப்பெண் பெற்று, இப்பாடப்பிரிவில் மாநில மூன்றாமிடம் பிடித்தார். அவர் பேஷன் டெக்னாஜி படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP